search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு பணியாளர்கள்"

    • மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது.
    • அவற்றை அகற்றும் பணியில் 4 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



    மதுரை மாசி வீதிகளில் தேங்கிய குப்பைகளை துணை மேயர் நாகராஜன் மற்றும் குழுவினர் அப்புறப்படுத்திய காட்சி.

     மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொது மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி னர். இதனால் வீதிகள் எங்கும் குப்பை, கூளங்கள் மலைபோல் தேங்கின. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் வெடித்த பட்டாசுகள் மற்றும் பிளாஸ் டிக் கழிவுகள் நகரின் அடை யாளத்தையே மாற்றியுள் ளது.

    நேற்று ஒரே நாளில் மதுரை மாநகரில் மட்டும் 1,000 டன் குப்பைகள் தேங் கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி–வித்துள்ளது. இதனை ஒரே நாளில் அப்பு றப்படுத்தும் வகையில், 4 ஆயிரம் துப்புரவு பணியா ளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6 மணி முதல் பிற்ப கல் 3 மணிக்குள் இந்த பணி களை முடிக்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை கார ணமாக தேங்கியுள்ள குப் பைகள் மழை நீரில் நனைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனை அப்பு றப்படுத்த தூய்மை பணியா ளர்களுக்கு கையுறை மற்றும் உபக ரணங்கள் வழங்க–வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. குறிப்பாக மதுரை மாந கரில் தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் தீபாவளி தினத்தன்று அப்பகுதிகளில் சேர்ந்த குப்பைகளை அகற் றும் பணியினை கடந்த நான்காண்டுகளாக மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிறு தீபாவளி முன் னிட்டு தெற்குமாசி வீதி கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்க ளில் நடைபெற்ற வியா பாரத்தின் போது சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியினை இன்று மாவட்டத் தலைவர் பாச வேல் சிந்தன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் குப்பைகளை அகற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, பொருளாளர் வேல் தேவா ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இந்த பணியில் ஏராளமான வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அந்த குப்பைகள் அவனி யாபுரம் வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டன.

    • ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
    • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன், மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அமுதா சந்திரன்,ஜேம்ஸ்,செல்வி, கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சங்கரநயினார், சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், முத்துக்குமார், ஜோதிடர் தங்க இசக்கி, மோகன், ராஜன், ரஹீம், பவுல், கஸ்பா செல்வம் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளை சார்ந்த தூய்மைப் பணியாளர்க ளுக்கு புத்தாடை, இனிப்பு களை தனுஷ்குமார்

    எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதி யில் தொற்று பரவாத வண்ணம் தங்கள் உயிர் களையும் பொருட்படுத்தா மல் அர்ப்பணிப்பு டனும் சிறப்பாக பணி யாற்றிய முன்கள பணி யாளர்களான தூய்மை பணியா ளர்கள் அனை வருக்கும் நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கட்டணமில்லா பஸ் வசதி திட்டம் போன்ற சிறந்த திட்டங்களை செயல் படுத்தக்கூடிய முதல்-அமைச்சர் நமக்கு கிடைத் துள்ளார்.

    மேலும் நமது முதல்-அமைச்சரின் சிறப்பான ஆட்சியில் ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தி வருகிறார். வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பேரூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண் ணாவி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச் செல்வி, மாவட்ட மாண வரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் 2 வது வார்டு பகுதியில், கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான செ.ராஜசேகரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவியாக துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் பல்லடம் நகர திமுக., செயலாளர் ராஜேந்திர குமார்,வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், கிருஷ்ணசாமி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் குமார்,மற்றும் லாரி முருகசாமி, பரமசிவம், சிலம்பரசன், மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    • பெண்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சியில் 70-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என துப்புரவு பணியாளர்கள் அறிவித்தி ருந்தனர். அதன்படி இன்று காலை பெண்கள் உட்பட 63 துப்புரவு பணியாளர்கள் விருதுநகர் நகராட்சி அலு வலகம் முன்பு திரண்டனர்.

    ஒப்பந்த முறை துப்புரவு பணியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. சி.ஐ.டி. யு. நகர அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயபாண்டி முன்னிலை வகித்தார்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
    • சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில், பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திடீரென கால வரையறை யற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக எங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

    தனியாருக்கு டெண்டர் விடப்பட்டிருந்தால் அதற்கான நகலை காண்பி க்க வேண்டும், இந்த மாதம்5ம் தேதி இந்த சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கவுன்சி லர் சதாசிவகுமார் தலைமை தாங்கினார்.

    இந்த திடீர் போராட்ட த்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நகராட்சி பொறுப்பு ஆணையர் குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் ஞாயிற்றுக்கிழமை அன்று டெண்டர் எடுத்த நபர் நேரில் வந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என உறுதி அளித்தார்.

    அதன் பிறகு போராட்டக்காரர்கள் அதுவரை தாங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இந்த டெண்டர் முறை தவறானது என்றும், ஒருவேளை சட்டப்படி டெண்டர் விடப்பட்டி ருந்தாலும் அதற்கான எந்த உத்தரவும் தங்களிடம் காண்பிக்கப்படவில்லை என்றும் கூறினர்.

    மேலும் எந்த உத்தரவும் இல்லாமல் டெண்டர் எடுத்த நபர் என கூறிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட சூப்பர்வைஸர்கள் தங்கள் மீது அதிகாரம் செலுத்துவதை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர்.

    பின்னர் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்பொழுது நகராட்சி அலுவலகத்திற்குள் பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் தொட ர்பாக கூறி சென்றுள்ளனர்,தொடந்து அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    • நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நகராட்சியில் 25க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று காலை பணியை புறக்கணித்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் தங்களது பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் பணி செய்யும் சுமார் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்  துப்புரவு பணி செய்யும் பொழுது அணிந்து கொள்ளும் மாஸ்க், கிளவுஸ், கிருமி நாசினி ஆகியவை பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பின்றி பல மாதங்களாக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

    தூய்மை பணியின் போது எந்த உபகரணமும் இல்லாமல் பணி செய்வதால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பணி செய்யும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இந்தப் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துப்புரவு பணி பாதிக்கப்பட்டது. உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர். கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் கண்டனத்திற்குறியது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

    • குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
    • இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை, 60 ஆயிரத்திற்கும் மேலான வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். குப்பைகள் வீடு, வீடாக சேகரிப்பது, சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை சேகரிப்பது, ஓட்டல் கடைகளில் கழிவுகள் சேகரிப்பது, வடிகால் அடைப்பை நீக்கி, கழிவுநீர் எளிதில் செல்லும்படி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

    இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது. கடந்த மாத நகரமன்ற கூட்டத்தில் இது குறித்து அனைத்து வார்டு கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள். அதனால் தூய்மை பணியா ளர்களின் மேஸ்திரிகளை கூட்ட அரங்கில் வரவழைத்து புகார் வராத வகையில் பணியாற்ற வேண்டும் என சேர்மன் கமலக்கண்ணன் தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.

    • இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
    • துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை.

    மதுரை:

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை நகரில் 100 வார்டுகள் உள்ளன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாள்தோறும் இங்கு டன் கணக்கில் குப்பைகள் குவிகின்றது. இதனை அப்புறப்படுத்த வார்டு வாரியாக நிரந்தர மற்றும் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மதுரை மாநகராட்சியில் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள தொகையை உடனே வழங்கக்கோரி மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் அலுவலக நுழைவாயிலில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும், தினக்கூலி அடிப்படையில் 16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து மரணமடைந்த தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன.

    • துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டுவரும் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தொண்டி சார்பில் தொண்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    செயலாளர் முருகேசன், பேரூராட்சி மன்ற தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பட்டய தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா வரவேற்றார். முன்னாள் துணை ஆளுநர் சண்முகம், முன்னாள் தலைவர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டி, ரஜினி பிரசாந்த், சீத்தாராமன், எல்லார்சி சீனிவாசன் செயல் அலுவலர் செல்வராஜ், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்வி அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்
    • சுமூக தீர்வு காணப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் இன்று கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் போலீஸ் நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், துப்புரவு பணியாளர்களான எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும், குமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து போராட்டம் நடத்திய போது கல்வி அதிகாரிகள் சிலர் எங்களை ஆபாசமாக திட்டினார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுதொடர்பாக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடக்கிறது என கூறினர்.

    இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதில் சுமூக தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×